தொண்டி, நவ.15: தொண்டி மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக புயல் காப்பகம் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தயார் நிலையில் உள்ளது. தொண்டி கடற்பகுதி மற்றும் நம்புதாளை கடற்கரை பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், புயல் வரும் பட்சத்தில் மக்களை தங்கவைக்க புயல் காப்பகம் தயார் நிலையில் உள்ளது.