ராமநாதபுரம், நவ.15: ராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதில் காயமடைந்த அதிமுக நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ராமநாதபுரம் எம்எஸ்கே நகரை சேர்ந்த முருகன்(42), அதிமுக ஒன்றிய இளைஞர் பாசறை துணை செயலாளர். தேவிபட்டினம் ராமநாதபுரம் இசிஆர் சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் முருகன் டூவீலரில் வந்துள்ளார். புல்லங்குடி கிராமம் அருகே வரும்போது, திடீரென டூவீலர் பழுதானது. இதையடுத்து, சாலையோரத்தில் அவர் நின்றுள்ளார். அப்போது ரோந்து வந்த தேவிபட்டினம் எஸ்ஐ நாகராஜபிரபு மற்றும் போலீசார் முருகனை அடித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அதிமுக நிர்வாகி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.