கதவு கண்ணாடி முதல் கழிப்பறை வரை சுத்தம் ‘ஹேப்பி இன்று ஒரு நாள் ஹேப்பி’

ராமநாதபுரம், நவ. 15: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயலால் ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் மாணவர்கள் ஒரு நாள் விடுமுறை கிடைத்ததால் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக பருவமழை இல்லை. மழையே பெய்யவில்லை என்றால் புயலுக்கும் வாய்ப்பில்லை. மழை காலங்களில் சில நாட்கள் பெய்தாலும் நள்ளிரவில், அதிகாலையில் மட்டும் மழைபெய்தது. இந்த மழையின் காரணமாக ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றாலும் பள்ளி நேரங்களில் மழை இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. பல மாவட்டங்களில் மழைக்காக பள்ளிக்கு விடுமுறை என அறிவிப்பு வரும்போதெல்லாம் அந்த ஊரில் போய் படிக்கலாம் என மாணவர்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில் கஜா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கஜா புயலால் கொடுக்கப்பட்ட விடுமுறையை மாணவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.

Related Stories: