ராமநாதபுரம், நவ.15: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயல் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கண்மாய் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் முதல் மாவட்டத்தில் பல பகுதிகளில் பருவமழை பெய்து வரும் நிலையில், சேதமடைந்துள்ள கண்மாய் கரைகள் கண்டறியப்பட்டு பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே சித்தூர் கண்மாயில் கிழக்கு புறத்தில் உள்ள கரையில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறையினர் கரையை சரி செய்யும் பணி ஜேசிபி இயந்திரம் மூலமாக நடைபெற்று வருகிறது.