பட்டுக்கோட்டையில் தமமுக நிர்வாகிகள் கூட்டம்

பட்டுக்கோட்டை, நவ. 14: பட்டுக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் தியாககாமராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜாபாண்டியன் வரவேற்றார். மாவட்ட தலைவர் குருமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர்ஜெயவிவேகானந்தன் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் பிரிசில்லாபாண்டியன், துணை பொது செயலாளர்கள் இமான்சேகர், நல்லுச்சாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலங்களாக அறிவிக்க வேணடும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர இளைஞரணி செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Related Stories: