ஈரோட்டில் ரூ.6.38 கோடிக்கு மதுபானம் விற்பனை

ஈரோடு, நவ. 8:   தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.6.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

 ஈரோடு மாவட்டத்தில் 186  டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கடைகளில் வழக்கமாக தினசரி ரூ.3 கோடி இருந்து ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.  தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக 12 பாட்டில்கள் கொண்ட பீர்பாட்டில்கள் 5 ஆயிரத்து 302 பெட்டிகளும், மதுபானங்களில் 10 ஆயிரத்து 135 பெட்டிகளும் விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டு ரூ.6 கோடியே 38 லட்சத்து 96 ஆயிரத்து 535க்கு மதுபானங்கள் விற்பனையானது.

  கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.5 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 600க்கு விற்பனையானது குறிப்பிடதக்கது. இந்த ஆண்டு ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 935க்கு கூடுதலாக மது விற்பனையாகியுள்ளது.

Related Stories: