எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் சிறையில் இருந்து 4 கைதிகள் விடுதலை

சேலம், நவ.2: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் மத்திய சிறையில் இருந்து நேற்று, 4 ஆயுள் கைதிகள் விடுவிடுக்கப்பட்டனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளில், நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் கைதிகளை அரசு விடுதலை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 1,300 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி நேற்று, சென்னை, சேலம், கோவை மத்திய சிறைகளில் இருந்து நன்னடத்தை ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் இருந்து தண்டனை கைதிகளான செந்தில்குமார், வெங்கடாசலம், முனிராஜ், கோவிந்தன் ஆகியோரை நன்னடத்தை அடிப்படையில் நேற்று காலை விடுவித்தனர். அவர்களின் உறவினர்கள், சிறை வாசலில் திரண்டிருந்து, அவர்களை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories: