கோவை, அக்.31: அன்னூரில் ஒரு வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த முகமூடி கொள்ளையில் போலீசாருக்கு தொடர்பிருக்கலாம், நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பாதிக்கப்பட்டவர் கோவை எஸ்.பி.,அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளார். கோவை அடுத்த அன்னூர் மெயின்ரோட்டில் அரிசி கடை வைத்திருப்பவர் விஜயகுமார்(45). கடையை ஒட்டி வீடு உள்ளது. இவரது வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.ஒரு லட்சம் மற்றும் 4 பவுன் நகை திருடு போனது. அப்போது வீட்டில் பதிவான சிசிடிவி காட்சியில், முகமூடி அணிந்த ஒருவர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.