பெரம்பலூர். அக்.23: பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம்ஸ் பெஷலின் 24வது கிளை அரியலூரில் திறக்கப்பட்டது. பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் சுவீட்ஸ் அன்ட் பேக்கரி நிறுவனம் பெரம்பலூர், சென்னை, திருச்சி, கரூர், ஆத்தூர், நாமக்கல், பாண்டிச்சேரி, துறையூர் ஆகிய பெருநரகங்களில் செயல்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து இந்நிறுவனத்தின 24வது கிளை அரியலூரில் சின்னகடை தெரு, விநாயகர் கோயில் எதிர்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன நிர்வாக இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார். அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தார். அரியலூர் கண்ணன் ஸ்டோர் உரிமையாளர் கண்ணபிரான் திறந்து வைத்தார். கண்ணன் ஜவுளி கடை உரிமையாளர்கள் சண்முகம், சீத்தாராமன் மற்றும் வக்கீல் அருள்நம்பி, மதிமுக நகர செயலாளர் வக்கீல் மனோகரன், ஏபிஎன் ஜவுளி உரிமையாளர் சுதாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.