ராமநாதபுரம், அக்.23: ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறைக்கு பின் நேற்று ராமநாதபுரத்திற்கு பல ஊர்களில் இருந்து வெளியூர் செல்ல வந்தவர்கள் பஸ் இல்லாமல் அவதிப்பட்டனர். நேற்று மாலை 4.45 மணியளவில் ராமநாதபுரத்திலிருந்து பால்கரை வரை செல்லும் அரசு டவுன் பஸ்சை பரமக்குடி செல்ல ரூட்டை மாற்றிய நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் பஸ்சை விட்டு இறங்க மாட்டோம் என கூறியதையடுத்து மீண்டும் பால்கரை கிராமத்திற்கு இயக்கப்பட்டது.