சிவகங்கை, அக். 18: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ரேசனுக்கு தனித்துறை, ஓய்வூதியம், தரமான எடைகளை பொருட்களை வழங்குதல், பொட்டலமுறை, ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலகம் முன் திருப்பத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.