சாயல்குடி, அக்.18: சாயல்குடியில் கிளை போக்குவரத்து பணிமனை கட்டும் பணியை விரைவாக துவக்க வேண்டும் என அமமுக வலியுறுத்தி உள்ளது. அமமுக சாயல்குடி ஒன்றிய செயலாளர் பச்சகண்ணு கூறுகையில், ‘‘கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகள் உள்ளன. இதில் சாயல்குடி போக்குவரத்து மிகுந்த நகராக விளங்குவதால் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் கடைசி நகரமாக விளங்கும் இங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், அரசு அலுவலகங்கள், மருத்துவ சிகிச்சை பெற, மேல்நிலை கல்வி பயில போன்றவற்றிற்கு மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தடையின்றி பஸ்கள் இயக்குவதற்காக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாயல்குடியில் கிளை பஸ் டிப்போ அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.