வீடு புகுந்து நகை திருட்டு

பழநி, அக். 18: பழநியில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் ேதடுகின்றனர். பழநி திருநகரைச் சேர்ந்தவர் அப்துல்கலாம் (46), மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்துடன் வீட்டு மாடியில் தூங்கினார். அப்போது மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகையும், ரொக்கம் ரூ.ஆயிரத்தை திருடிச் சென்றார். காலையில் அப்துல்கலாம் மாடியை விட்டு கீழே இறங்கி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு திருட்டு சம்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பழநி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: