ஆட்டோவில் கடத்திய 200 கி.ரேஷன் அரிசி பறிமுதல்

நித்திரவிளை, அக்.18: நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் இருந்து ஆட்டோவில் ேரஷன் அரிசி கடத்துவதாக நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன் ஜாசிலின், சோபனராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நித்திரவிளை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பயணிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் ஆட்டோவில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதை கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்வதாக தெரிகிறது. இதையடுத்து ஆட்டோ மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆட்டோ டிரைவருடன் நாகர்கோவில் குடிமைப்ெபாருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: