பள்ளிப்பட்டு, அக். 17: ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் வேதாத்திரி மகரிஷி மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா, சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அப்துல்கலாம் கல்வித்துறைக்கு ஆற்றிய சாதனைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கப்பட்டது. அதன்பிறகு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஆர்.கே.பேட்டை, சோளிங்கர் பகுதிகளில் நடைபெற்றது. இந்த பேரணியை ஆர்.கே.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சோளிங்கர் சப்-இன்ஸ்பெக்டர் மஹாராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.