ஜலகண்டாபுரம், அக்.17: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவிகள், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். தினமுன் காலை மற்றும் மாலை நேரங்களில் அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு படிக்க செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனை அருகில் வாலிபர்கள் சிலர் கூட்டமாக நின்று கொண்டு கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை டியூசன் செல்லும்போது மாணவி ஒருவரின் தாயார் பாதுகாப்பிற்காக உடன் சென்றுள்ளார்.