நாமகிரிப்பேட்டை, அக்.17: நாமகிரிப்பேட்ைட பேரூராட்சி பகுதிகளில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகளை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதை மீறி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
நேற்று நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் மெயின்ரோடு, கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், வாரசந்தை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ஓட்டல்கள், மளிகை கடை, பேக்கரி உள்ளிட்ட 60 கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.