நாகர்கோவில், அக்.17 : பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டு உள்ளார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார். பன்றி காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் உள்ளதா? என்பதை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனை உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பன்றி காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் விளக்கினர். பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது : குமரியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ேவகமாக பரவி வருகிறது. குறிப்பாக நாகர்கோவிலில் 2 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.