தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

புதுக்கோட்டை, அக். 16: புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கூழையான் விடுதி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முறையான குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை அளித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சென்று ஊராடசி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

Related Stories: