ஊட்டி,அக்.12: மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் பகுதிக்கு ஆட்டோவில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி விரைவில் தொட்டபெட்டாவிற்கு ஆட்டோக்கள் செல்ல தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரயில், பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வருகின்றனர். ஒரு சிலர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆட்டோக்களில் வருகின்றனர். அதிகாலை ேநரங்களில் ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளை மூளை சலவை செய்யும் சில ஆட்டோ ஓட்டுநர்கள் குன்னூர் வரை ஆட்டோக்களில் ஏற்றி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், சில ஆட்டோ ஓட்டுநர்கள் குன்னூர் பகுதியில் இருந்தும் மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, இனி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் பகுதிக்கும், குன்னூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஆட்டோக்கள் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.