அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

சாயல்குடி, அக். 12: கடலாடி முத்தாலம்மன், கருப்பசாமி கோயில் வருடாந்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் துவங்கியது. அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு மாவிளக்கு எடுத்தனர். திருவிளக்கு பூஜை, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் போன்ற நிகழச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் உற்சவ அம்மன் தேர் வீதி உலா நடந்தது. முளைப்பாரியை பெண்கள் எடுத்து கடலாடியின் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: