டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் விசிக மனு

திருவள்ளூர், அக். 12: ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் நீலவானத்துநிலவன் தலைமையில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட தாராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த வழியாகத்தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் சென்று வருகின்றனர்.எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன்கருதி டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் உள்ளது.கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரிடம் மனு அளித்தனர். அப்போது, நீலவானத்து நிலவனுடன் நேசகுமார், சாம்சன், அறிவுச்செல்வன், மகளிரணி செயலாளர் சுதா உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: