குஜிலியம்பாறை, செப். 26: அரசு குளம் தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்ததை கண்டித்து குஜிலியம்பாறை விஏஓ அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை சின்னழகுநாயக்கனூர் அரசுக்கு சொந்தமான மேட்டுமடைக்குளம் உள்ளது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்குளத்தில் பல வகையான மரங்கள் உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள புலியுத்து, பட்டலுத்து வறட்டாறுகளில் வரும் தண்ணீர் முழுவதும் இக்குளத்தில் தேங்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர், இக்குளத்தில் உள்ள மரங்களை வெட்ட முயன்றார். இதையறிந்த கிராமத்தினர் திரண்டு வந்து மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். அப்போது பட்டா இடத்தில் உள்ள மரங்களை வெட்டுவதாக கிராமமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.