ஆற்காட்டில் இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ஆற்காடு, செப்.26: ஆற்காடு நாட்டாமை ராஜீ தெருவை சேர்ந்தவர் எஸ்.ஜெகன்(19). இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர் நேற்று ஆற்காடு பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில்  நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கிளைவ் பஜார் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ்(28) என்பவர் அங்கு வந்து ஜெகனிடம் தகராறு செய்து, ஆபாசமாக பேசி குடும்பத்தோடு ஒழித்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஜெகன் ஆற்காடு டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து ராஜேசை கைதுசெய்து விசாரணை செய்து வருகிறார். ராஜேஷ் ஏற்கனவே இந்து முன்னணி உறுப்பினராக இருந்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நீக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜெகன் தான் காரணம் என கருதி அவரிடம் தகராறு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: