காரைக்குடி, செப்.25: குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்துக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த அறிவியல் நிலையத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் செந்தூர்குமரன் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் கூறுகையில், ‘‘வேளாண் அறிவியல் நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் தென்னிந்திய வருடாந்திர கருத்தரங்கு ஐதராபாத்தில் நடந்தது. இதில் 72 வேளாண் அறிவியல் நிலையங்களின் தலைமை விஞ்ஞானி மற்றும் தலைவர்கள் வேளாண் அறிவியல் நிலையங்களின் பணிகளை உயர்மட்ட குழுக்களின் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.