ஈரோடு, செப். 25: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவர் வீரா.சிதம்பரம் இதுகுறித்து கூறியுள்ளதாவது: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு ஈரோடு அருகே பெருமாள்மலை பகுதியில் உள்ள பிளாட்டினம் மகாலில் வரும் 30ம் தேதி மதியம் 3 மணிக்கு துவங்குகிறது.
இந்த மாநாட்டிற்கு கட்சியின் நிறுவன தலைவர் வீரா.சிதம்பரம் தலைமை தாங்குகிறார். முதன்மை பொதுச்செயலாளர் கிருஷ்ணன், மகளிரணி தலைவி பூவாத்தாள், கோவை மண்டல தலைவர் சுப்பன், பொதுச்செயலாளர் அன்புநாதன், நாமக்கல் மாவட்ட தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். இதனை தொடர்ந்து மாநாட்டில் அருந்ததிய சமுதாய