காவிரி ஆற்றில் விழுந்த கல்லூரி மாணவர் பலி

ஈரோடு, செப்.21:  சேலம் மாவட்டம் சங்ககிரி குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சவுந்திரராஜன்(24). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். சவுந்திரராஜன் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் புதுப்பாலத்தின் தடுப்பின் மேல் உட்கார்ந்திருந்தார். அப்போது காவிரி ஆற்றில் எதிர்பாரத விதமாக சவுந்திரராஜன் விழுந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சவுந்திரராஜன் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: