பரமக்குடி, செப். 21: பரமக்குடி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால், 20க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் சேதமடைந்தன. பரமக்குடியில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு வெளியூர் செல்லும் பயணிகள் தங்களின் வாகனங்களை நிறுத்திச் செல்வதற்காக, கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பாக 3 ஆயிரம் சதுரடியில் வாகனங்களை நிறுத்துவதற்கு சைக்கில் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. இதனை ஒப்பந்ததாரிடம் விட்டு கட்ணம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த்த கனமழையால், சைக்கிள் நிறுத்தும் பகுதியில் உள்ள கட்டிட்டதின் மேற்கூரையின் ஒருபகுதி வலுவிழந்து, நேற்று காலை திடீரென சரிந்து விழுந்தது.