சாணார்பட்டி யூனியனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோபால்பட்டி, செப். 21: சாணார்பட்டி பஸ்நிலையம் அருகே பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜான்கென்னடி தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் அருள்ஞானபிரகாசம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாணார்பட்டி ஒன்றியம் 21 பஞ்சாயத்துகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத உள்ளாட்சி நிர்வாகங்களை கண்டித்தும், செயல்படாத, நிதி ஒதுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: