வாலிபரை அரிவாளால் வெட்டியவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை

பாபநாசம், செப். 21: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் மேலஅக்ரஹாரத்தை சேர்ந்தவர் மருதமுத்து, இவரது மகன் சிவகுருநாதன் (19). தச்சன் இருப்பு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன்கள் சேகர், இளங்கோவன். இந்நிலையில் சிவகுருநாதனின் உறவினர் மகள் சுகன்யாவை காதலித்து விட்டு திருமணம் செய்ய இளங்கோவன் மறுத்துவிட்டார். இதையடுத்து ஊரில் பஞ்சாயத்து நடந்தது. இதனால் ஆத்திரமடைந்து 2001ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி மருதமுத்து வீட்டுக்கு சென்று ஜெயராமன், இவரது மகன்கள் சேகர், இளங்கோவன் ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது மருதமுத்துவை ஜெயராமன் கட்டையால் தாக்கினார். இதை தடுக்க வந்த மருதமுத்துவின் மகன் சிவகுருநாதனை அரிவாளால் சேகர், இளங்கோவன் வெட்டினர். இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, பாபநாசம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் பாபநாசம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. வழக்கை விசாரித்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக இளங்கோவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, அரிவாளால் வெட்டியதற்காக 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜசேகர் தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: