க.பரமத்தியில் மா.கம்யூ கட்சி பிரசார கூட்டம்

க.பரமத்தி, செப்.21: மத்திய, மாநில அரசுகளின்  மக்கள் விரோத கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி க.பரமத்தி ஒன்றியக்குழு சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் கடைவீதியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மூத்த தலைவர் பெரியதம்பி, மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா முகமது, கிளை நிர்வாகிகள் சுந்தரம், சரவணன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: