கும்பகோணம், செப். 19: தமிழக அளவில் இயற்கை சாகுபடியில் சாதனை செய்த கும்பகோணம் விவசாயிக்கு எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கடந்த மாதம் கோயம்புத்தூரில் உழவர் மேம்பாட்டு விழா நடத்தியது. இதில் தமிழக அளவில் இயற்கை சாகுபடி முறையில் குறைந்த செலவில் அதிக நெல் மகசூல் பெற்று வரும் கும்பகோணம் அடுத்த ஏரகரம் விவசாயி சாமிநாதனுக்கும், குறைந்த செலவில் எளிய முறையில் வேளாண் கருவிகளை வடிவமைத்து செயல்படுத்தி வரும் கும்பகோணம் வேளாண் பொறியாளர் கார்த்திகேயனுக்கும் பதக்கம், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இவர்கள் நெல் மற்றும் வேளாண் கருவிகள் வடிவமைத்ததில் தமிழகம் அளவில் முதலிடம் பெற்றவர்கள். இதையறிந்ததும் சுவாமிநாதன், கார்த்திகேயனை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பாராட்டினார்.