ஆலங்குடி, செப். 19: ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் நால்ரோடு பகுதியில் சிலர் வெளிமாநில மதுபானங்களை கடத்தி சென்று விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குடி- புதுக்கோட்டை சாலை கோவிலூர் நால்ரோடு பகுதியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.