தொண்டி, செப்.19: தொண்டி மற்றும் தாமேதிரன்பட்டினம் அரசு பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தாய்ப்பால் மற்றும் ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொண்டி மேற்கு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அகமது பாய்ஸ் துவக்கி வைத்தார். ஒவ்வொரு வீடாக சென்று தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் பயன்கள் குறித்தும், ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறித்தும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு விளக்கினர். தாமேதிரன்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்சாமி தலைமையில் பேரணி நடைபெற்றது. உதவி ஆசிரியை சிவசங்கரி ஊட்டச்சத்து குறித்தும் உணவு பொருள்கள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துறைத்தார். மேலும் கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவு பொருட்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.