மேட்டூர் அருகே எறும்புதின்னியை வேட்டையாடிய 2 பேர் கைது

மேட்டூர், செப்.19: மேட்டூர் அருகே எறும்புதின்னியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.  மேட்டூர் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை வனப்பகுதியில் மேட்டூர் வனவர் சுந்தரராஜன், வன காப்பாளர் சரவணன், பிரான்சிஸ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமன்பட்டியைச் சேர்ந்த மாதப்பன்(30), மூலப்பனங்காட்டைச் சேர்ந்த காளியப்பன் மகன் சவுந்திரராஜன்(20) ஆகியோர் கொடுவாள், டார்ச்லைட் மற்றும் 5 கிலோ எடை கொண்ட எறும்புதின்னியுடன் வந்து கொண்டிருந்தனர்.இதனை கண்காணித்த வனத்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.  இதில், எறும்புதின்னியை புகை வைத்து கொன்று பிடித்தது தெரியவந்தது. இதன்பேரில், 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related Stories: