திருச்சி, செப்.18: திருச்சி 12வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என இளைஞர் மன்றத்தினர் மனு அளித்துள்ளனர். திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனிடம் , அனைத்திந்திய இளைஞர் மன்றத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருச்சி மாநகராட்சிககுட்பட்ட 12வது வார்டின் மைய பகுதியில் உள்ள இப்ராகிம் பூங்காவில் உடற்பயிற்சி கருவிகள் அமைக்க வேண்டும். இந்த வார்டில் நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும். கல்யாணசுந்தரம்நகர் பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் நேரத்தை கூடுதலாக்க வேண்டும்.