ரயிலில் இருந்து தவறி விழுந்த இருவரின் கால் துண்டானது

ராமநாதபுரம், ஆக. 15: ராமநாதபுரம்  மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் நேற்று காலையில்  பரமக்குடி ரயில் நிலையத்தில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள்  ரயிலில் ஏறினார். மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்குள் ரயில் நுழைந்தபோது,  எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் 2 கால்களும்  ரயில் சக்கரங்களில் சிக்கி துண்டானது. மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி  சிகிச்சைக்கு பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் அவர்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மானாமதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே மேலசோத்தூரணியை  சேர்ந்தவர் ரமேஷ்(38). கூலி தொழிலாளியான இவர், நேற்று காலை அருகில் உள்ள  ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல  முயன்றார். அப்போது அந்த வழியாக  சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி  சென்ற ரயில் அவர் மீது மோதியது. இந்த  விபத்தில் ரமேஷின் வலது கை மற்றும்  கால் துண்டானது. இடது காலில் பாதம்  துண்டானது.

Related Stories: