ராமநாதபுரம், ஆக. 15: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் நேற்று காலையில் பரமக்குடி ரயில் நிலையத்தில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலில் ஏறினார். மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்குள் ரயில் நுழைந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் 2 கால்களும் ரயில் சக்கரங்களில் சிக்கி துண்டானது. மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மானாமதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.