ராமநாதபுரம், ஆக.15: ராமநாதபுரம் அருகே உள்ள மணல்குவாரியை மூட வலியுறுத்தி கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை பகுதியில் சவடு மணல் குவாரி உள்ளது. இப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் ெவகுவாக குறைந்துபோனது. இதனால் இந்த குவாரியில் மணல் அள்ள ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி தொடர்ந்து மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் அப்பகுதிமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.