ஆலங்குடி,ஆக.14: ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் என்பவரது மகன் ஹரிஹரசுதன் (26). பி.இ. பட்டதாரி. இவர் சென்னையில் வேலை பார்த்துள்ளார். அங்கு போதுமான வருமானம் கிடைக்காததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இவர் நேற்று தனது நண்பர்களுடன் மாங்காட்டில் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப் போது ஹரிஹரசுதன் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரசுதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வடகாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றவரை தேடி வருகின்றனர்.