செந்துறை, ஆக. 14 : பொன்பரப்பியில் உள்ள மாகசக்தி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா, 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் விழா நடத்துவது தொடர்பாக பொன்பரப்பி, பொன்குடிக்காடு கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டதால் திருவிழா நிறுத்தப்பட்டது. மேலும் சாமுண்டீஸ்வரி, மாரியம்மன் சிலைகளை நீதிமன்றம் கைப்பற்றியது. இதையடுத்து 40து ஆண்டுகளாக வழக்குகள் நடந்தது. இதையடுத்து கடந்தாண்டு மாரியம்மன் சிலையை பொன்பரப்பி மக்களிடமும், சாமுண்டீஸ்வரி சிலையை பொன்குடிக்காடு மக்களிடமும் நீதிமன்றம் ஒப்படைத்தது.