திருச்சி, ஆக.14: சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் ஆணையின்படியும் திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் லட்சுமிகாந்தன் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோரின் அறிவுரைகளின் படியும் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்ெவாரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய பண்டிகை விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் பணியாற்றும் அனைத்து விதமான ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டியது வேலை அளிப்பவர்களின் சட்டபூர்வ கடமையாகும். அவ்வாறு அன்றைய தினம் கடைகள் நிறுவனங்கள், உணவக நிறுவனங்கள் மற்றும் மோட்டர் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களை வேலை அமர்த்த உத்தேசிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வேலை அளிப்பவர் அன்றைய தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அவர்களுக்கு எழுத்துபூர்வமாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.