திருச்சி, ஆக.14: மணப்பாறை அருகே மாயமான கருங்குளம் ஏரியை கண்டுபிடித்து குடிமராமத்து பணி மேற்கொள்ள வேண்டுமென என கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மணப்பாறை அருகே கருங்குளம், பழையகோட்டை கிராம மக்கள், விவசாயிகள் சேசுராஜ் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மணப்பாறை அருகே கருங்குளம் பழையகோட்டை மற்றும் செக்கணம் பஞ்சாயத்துக்கு இடைபட்ட பகுதியில் கருங்குளம் ஏரி உள்ளது. ஆக்கிரமிப்பாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் ஏரி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.