கரூர், ஆக.14: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 235 மனுக்கள் குவிந்தன. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு உதவித்தொகைகள், அடிப்படை வசதிகள் கோரி 235 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.