சாயல்குடி, ஆக.14: சாயல்குடி பகுதியில் அனல் மின்நிலையத்திற்கு இடம் கையகபடுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி பகுதியில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைக்க 3 இடம் தேர்வானது. ஆனால் கடற்கரை மிக அருகில் இருப்பதால், மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதி மறுத்தது. இதனால் நரிப்பையூர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் மாற்று இடத்தில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அரசு நிலங்களை கையகப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.