ஆழ.எஸ்.மங்கலம், ஆக.14: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆனந்துர் அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் இல்லாததால் வெயிலில் நிறுத்துகின்றனர். எனவே சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகன்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் சைக்கிள் வைத்துள்ளனர். சைக்கிள் நிறுத்துவதற்கென பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் போதுமான இட வசதி இல்லை. இதனால் பெரும்பாலான மாணவர்கள் சைக்கிள்களை வெயிலில் நிறுத்துகின்றனர்.