ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் கவிக்கோமான் கம்பன் விழா கருத்தரங்க கோவை நடைபெற்றது. கம்பன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கோடூர் ரமணி சாஸ்திரி வரவேற்றார். தமிழ் சங்கத்தின் தலைவர் அப்துல்சலாம் தலைமை தாங்கி கம்பனின் எண்ணங்களும், வண்ணங்களும் என்ற தலைப்பில் பேசினார். ஜெயகௌரி கம்பனின் சொல்வளம் என்ற தலைப்பிலும், செயங்கொண்டான் கம்பனின் மனிதநேயம் என்ற தலைப்பிலும், பேராசிரியர் சிதம்பரம் கம்பனின் அறமும் மறமும் என்ற தலைப்பிலும், டாக்டர் குலசேகரன் கம்பனில் அடியும் முடியும் என்ற தலைப்பிலும் பேசினர்.