சிவகங்கை, ஆக.14: சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். புதியவர்கள் மற்றும் புதுப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வி பயிலும் பள்ளி மாறாமல் கடந்த ஆண்டில் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவ, மாணவியர் மட்டுமே புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க முடியும்.