ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் நேரு நகர் 9வது தெருவை சேர்ந்தவர் கோதண்டம் மகன் கார்த்தி(38). ஆர்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணி புரிகின்றார். வழக்கம் போல நேற்று காலை வேலைக்கு சென்றவர் பிற்பகல் சாப்பிட வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த தனது அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.