ராமநாதபுரம், ஆக.14: தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவத்தை இலவசமாக வழங்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜபட்டிணத்தை சேர்ந்த நாகசாமி மகன் தர்மராஜன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். இயற்கை பிரசவம் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச பிரசவம் வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘நமது நாடு வளர்ந்து வரும் நாடு, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகம் வாழும் நம் நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால் கல்வியையும், மருத்துவத்தையும் பாரத தேசம் முழுவதும் இலவசமாக அளிக்க வேண்டும். சுதந்திரம் பெற்ற பின்பு இன்று வரை கல்வியும் மருத்துவமும் மனிதநேயம் இல்லாத தொழிலாக மாறிவிட்டது. பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்ட போதிலும் பிரசவம் என்று வரும் போது கேள்விகுறியாக உள்ளது,