பரமக்குடி, ஆக.14: பரமக்குடி, முதுகுளத்தூர் சாலையில் தொடர்ந்து சரக்கு வாகனங்களில் அளவிற்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பரமக்குடி நகர் பகுதியிலிருந்து சரக்கு வானங்களில் தொடந்து அளவிற்கு அதிகமாக சரக்கு மூடைகள் ஏற்றப்பட்டு வருகிறது. அதிகமான பொருட்களை ஏற்றிய பிறகு அதிவேகமாக சாலைகளில் வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து விபத்து அபாயம் நிலவுகிறது. அதிக வேகத்தை கட்டுப்படுத்த ஹைவே போலீசார் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் விபத்துக்கள் இன்னும் குறையவில்லை. சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் தலையிட்டு, அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.